Puthiya Vaanam Thondruthae | புதிய வானம் தோன்றுதே

Loading

புதிய வானம் தோன்றுதே
புதிய பூமியும் காணுதே
பழைய யாவும் ஒழியுதே
புதிதாய் யாவும் மாறுதே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

நீதி எங்கும் நிறைந்திருக்கும்
நீதி மான்கள் கொடி பறக்கும்
புது மனை புகும் பாக்கியம்
புது சிருஷ்டியின் சிலாக்கியம்

அழுகை அலறல் அங்கு இல்லையே
ஆனந்தக் கடல் பொங்கிப் பொங்குதே
அன்னை யன்புடன் ஆற்றித் தேற்றுவார்
ஆர்ப்பரித் தெழுந்தா டிடுவோம்

மண்ணின் மாந்தரும் விண்ணின் வேந்தரும்
பின்னிப் பிணைவ தென்னே மகிமை
வெற்றி வாகை சூடும் வீரர் நாம்
பெற்றுக் கொண்டிடுவோம் சுதந்திரம்

தாகம் தணிக்கும் ஜீவ நதியாம்
ரோகம் தவிர்க்கும் ஜீவ விருட்சம்
பாவத் தடமும் அங்கு இல்லையே
தூய தேவன் ஒழி வீசிடுவார்

ஆசாரியர் அணி வகுப்போம்
அங்குள்ள அரியணை அமர்வோம்
பூலோக நினைவுகள் மறப்போம்
மேலோகச் சூழலில் திளைப்போம்

முத்து மாளிகை சுத்தப் பொன்மயம்
இரத்தின பளிங்கொளி வச்சிரம்
வேகம் நுழைவோம் புது நகரம்
மேகம் வரத் துடித்து நிற்கிறோம்

அல்லேலூயா, அல்லேலூயா (4)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS