Sabaiyorae | சபையோரே

Loading

சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள்

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது

நம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்

கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்
ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்

கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலை கீதங்கள் பாட வைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்

சொந்த மகனென்றும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம் தானே

தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
உணவையும் தண்ணீரையும் மிகுதியாய் தருவார்
எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
குழந்தை பாக்கியமும் கொடுத்திடுவார்

கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குள் இருந்தால்
விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைத்திடுமே
மிகுந்த கனி தந்து சீடர்களாய் வாழ்வோம்
அதுவே தகப்பனுக்கு புகழ்ச்சி உண்டாக்கும்

துன்பத்தின் நடுவே நாம் நடக்கும்போதெல்லாம்
வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார்
வாக்களித்து அனைத்தையும் செய்து முடிப்பார்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS