To Advertise Contact - christmusicindia@gmail.com

Sthoththiram Sthoththiram | ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Loading

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவுக்கே துதி
சாற்றிடுவோம் என்றுமே
சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத் தென்றும்
ஆற்றியே தேற்றுவதால்

இன்ப இயேசுவின் திவ்விய நாமத்தை
துன்பம் சூழும் எவ்வேளையிலும்
நன்றியோடு நாம் பாடிடுவோம்

தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும் அவர்
நம்மோடு இருப்பேன் என்றார் (2)
அக்கினி சூளையில் நடந்திடும் வேளையில்
விக்கினம் சூழா தென்றார் – இன்ப

கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் வேளையில்
சோர்ந்திடா பெலன் அளிப்பார் (2)
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு
நல்குவேன் கிருபை என்றார் – இன்ப

திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர்
திக்கற்றோராக விடார்
பயப்படாதே சிறுமந்தை என்றழைத்தார்
பாரில் நம் மேய்ப்பனவர் – இன்ப

சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும்
பங்கம் வராது காப்பார்
நம்மையே மீட்க தம்மையே ஈந்து
தரணியில் மாண்டுயிர்த்தார் – இன்ப

சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே
சீயோனில் சேர்த்திடுவார்
மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்
மகிமையின் சாயல் அணிவோம் – இன்ப

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS