Thaagam Theerkkum | தாகம் தீர்க்கும்

Loading

தாகம் தீர்க்கும் ஜீவ நதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்

அருவியின் நீரை பருகி விட்டேன்
ஆற்றினில் ஊற்றி அருந்தி விட்டேன்
துரவுகள் கடலும் தாகம் தீர்க்க வில்லை
தூரத்துக் கானலாய் ஆகியதே – தாகம்

கானகம் சோலையும் தேடிய பின்
வானகம் நோக்கியே அபயமிட்டேன்
கண்களை மெல்ல நானும் திறந்திட
கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் – தாகம்

மதகு போல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை
என் ஆத்ம தாகம் தீர்த்திட்ட கன்மலை
என் நேசரேசுவை வாழ்த்துகிறேன் – தாகம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS