Thaymadiyil Thavazhukindra | தாய்மடியில் தவழுகின்ற

Loading

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

கவலையில்லையே கலக்கம் இல்லையே
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் – நான்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்

செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
நன்றியோடு துதிக்கின்றேன்  – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே

துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா – என்

உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்
உம் தோளில் அமர்ந்துவிட்டேன்  – நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன் – நான்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்

அதிசயமே அதிசயமே
ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே

எபிநேசரே எபிநேசரே
இதுவரை உதவி செய்தீர்
எல்ரோயீ எல்எலியோன்
காண்பவரே உயர்ந்தவரே

படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமம் தியானிக்கின்றேன்
உம் அன்பு போதுமையா
உயிரினும் உயர்ந்ததையா – அது

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS