To Advertise Contact - christmusicindia@gmail.com

Thedi Iyaesu Vanthaar | தேடி இயேசு வந்தார்

Loading

தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழவைத்தார்

கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்

பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்

நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கயிலே
இயேசுவின் இரத்தத்தாலே
சுகமானேன் சுகமானேன் – நான்

எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார்  – என்னை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS