Thinam Athigaalaiyil | தினம் அதிகாலையில்

Loading

தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
தேவா உம் நாமத்தை துதித்திடுவேன்

வறண்ட தண்ணீரற்ற வனமிதிலே (2)
வாஞ்சித்தே என்னுள்ளம் உம்மைத் தேடுதே 2
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை (2)
உயர்ந்ததே உம்மைப்பாடித் துத்திடுவேன் 2 – தினம்

காலை தோறும் என்னை எழுப்பிடுவார்
கல்வி மானின் நாவைத் தந்திடுவார்
களைத்தோரைத் தேற்றிடும் உம் வாக்குகள்
காத்திருந்தே தினம் பெற்றிடுவேன் – தினம்

கண்விழித்தே என்னைக் காப்பவராம்
கரம் பிடித்தே என்றும் நடத்திடுவார்
எனக்காக யாவையும் செய்தவராம்
என் இயேசு ராஜனை துதித்திடுவேன் – தினம்

தீமை நிறைந்த இப்பாரினிலே
தினம் உந்தன் தயவாலே வாழ்ந்திடுவேன்
சீக்கிரம் வந்தென்னைச் சேர்த்திடுமே
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன் – தினம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS