To Advertise Contact - christmusicindia@gmail.com

Thiruppaatham Nambi Vanthaen | திருப்பாதம் நம்பி வந்தேன்

Loading

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

சரணங்கள்
இளைப்பாறுதல் தரும் தேவா
கலைத்தொரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் – திருப்பாதம்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கணிவோடென்னை நோக்கிடுமே – திருப்பாதம்

மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
ஏசுவே உம்மை அன்டிடுவேன் – திருப்பாதம்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே – திருப்பாதம்

உம்மை ஊக்கமாய் நோக்கிப்பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே – திருப்பாதம்

சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
ஏசுவே இன்று காட்டிடுமே – திருப்பாதம்

விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரப்பாதை காட்டினீரே
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன் – திருப்பாதம்

பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதராமலே காத்திருப்பேன் – திருப்பாதம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS