Thuthisey Maname Nitham | துதிசெய் மனமே நிதம்

Loading

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்
முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே – துதிசெய்

ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
எசுபரன் உன்காவலனாய் இருந்தாரே – துதிசெய்

சோதனை பலவாய் மேகம்போல் உன்னை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை – துதிசெய்

தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே – துதிசெய்

சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே – துதிசெய்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS