To Advertise Contact - christmusicindia@gmail.com

Ullamellaam Uruguthaiyo | உள்ளமெல்லாம் உருகுதையோ

Loading

உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொள்ளடங்கா நேசத்தாலே உன்
சொந்தமாக்கிக் கொண்டீரே

எந்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே

மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளொன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்க மெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் ஏசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ? – உள்ளமெல்லாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS