Um Paatham Paninthaen | உம் பாதம் பணிந்தேன்

Loading

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

பரிசுத்தமே பரவசமே
பரனே சருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் – உம்

புது எண்ணையால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் – உம்

நெருக்கத்திலே உம்மையழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர் – உம்

என் முன் செல்லும் உம சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே – உம்

கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்தீர் – உம்

என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம
நேசமுகம் என்றும் கண்டிடுவேன் – உம்

சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய்ச் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன் – உம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS