Ummaip Pirinthu | உம்மைப் பிரிந்து

Loading

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடனாயிருப்பேன் – நான்

முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் – நான்

பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்

நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

கர்த்தாவே என்னை ஆராய்ந்து
அறிந்து இருக்கின்றீர்
உட்காருதலையும் எழுதலையும்
அறிந்து இருக்கின்றீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS