To Advertise Contact - christmusicindia@gmail.com

Valladevan | வல்லதேவன்

Loading

பல்லவி
வல்ல தேவன் என்னோடிருப்பாரே
வழுவாதென்னை காத்திடுவாறே
அல்லேலூயா என்றார்ப்பரிப்பேன்

பயப்படாதே என்று உரைத்தாரே
பாரில் என்னை மீட்டெடுத்தாரே
பேரைச் சொல்லி அழைத்திட்டாரே
பேரானந்தம் நான் சொந்தமானேன்

தண்ணீர்களை கடந்திடும் போது
தயங்காதே உன்னோடு இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போது
அதுன் பேரில் பற்றாதே என்றார்

இமைப்பொழுது என்னை கைவிடாமலும்
இரக்கங்களால் சேர்த்துக் கொள்வாரே
நித்ய கிருபையுடன் இரங்கி
நித்தம் என்னை நடத்துவாரே

உறுதியாய் உம்மைப்பற்றிக் கொள்வாரே
உண்மையாய் என்னைக்காத்துக் கொள்வீரே
கெஞ்சும் வேண்டுதல்கள் கேட்பீரே
தஞ்சம் வேறொருவருமில்லை

அறிவாரே நான் போகும் வழியை
அறிந்தென்னை சோதித்திடுவாரே
புடமிட்டு சுத்தம் செய்வாரே
பின்பு சுத்த பொன்னாய் மாறுவேன்

வருவேன் என்ற வாக்குப்படியே
வருவீரே என் யேசு மணாளா
அசைவில்லா அந்நாட்டைச் சேர
ஆவலாக காத்திருப்பேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS