Yaerugindraar Thallaadi | ஏறுகின்றார் தள்ளாடி

Loading

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
என் ஏசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவர் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான் – ஏறுகின்றார்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறுகின்றார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசுநாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறுகின்றார்

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறுகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறுகின்றார்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்த தாயின் அன்பதுவே
எருசலேமே! எருசலேமே
என்றழுதார் கண்கலங்க – ஏறுகின்றார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS