Maan Kaalgal | Joel Thomasraj – Lyrics

மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி

தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே

என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே

சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே

சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர்

எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே

இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர்

error: Content is protected !!
ADS
ADS
ADS