Maanida Uruvil Avathariththa | மானிட உருவில் அவதரித்த

Loading

பல்லவி
மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

சரணங்கள்
ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும விலை நீக்குவார் – மானிட

கூவி அழைப்பது தேவ சித்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி – மானிட

இயேசுவின் நாமத்தின் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பிவா – மானிட

அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் ஏசுவை விசுவாசிப்பாய் – மானிட

கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசிவரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
ஏசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் – மானிட

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS