Magimaiyaay Vetri Sirantha | மகிமையாய் வெற்றி சிறந்த

Loading

மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)

கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே
கர்த்தர் என் பலன் என் கீதமுமானார்
கரம் பிடித்து என் இரட்சிப்புமானார் – மகிமையாய்

அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக் கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே – மகிமையாய்

பெலத்தினால் சிறந்தவர் வலக் கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வல கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் – மகிமையாய்

கிருபையினால் என்னை அழைத்த தேவனை
கரம் குவித்த நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத் தக்கவாறு
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் – மகிமையாய்

தம்புரு நடனத்தோடு பாடுவேன்
தீர்க்கதரிசி மீரியாம் போல
பெலத்தினால் வழி நடத்தினவரை
பரிகாரி என்று நான் பாடுவேன் – மகிமையாய்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS