Malaigal Vilagiye Ponaalum | மலைகள் விலகியே போனாலும்

மலைகள் விலகியே போனாலும்
நிலைவிட்டு பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு விலகிடாதே
என் சமாதானம் நிலைக்குமென்றாரே

வானம் பூமி யாவுமே மாறிடினும்
வானவரின் வாக்கு மாறிடாதே
மானிடர்கள் மனம் மாறிடுவார்
மாறிடா இயேசுவை நம்பி நிற்போம்

யேகோவா என்னும் நாமமுள்ளவர்
என்னை நோக்கி கூப்பிடு என்றுரைத்தார்
அறியா எட்டா பெருங் காரியங்களை
அறிவிப்பேன் நிச்சயம் என்றனரே – வானம்

திகையாதே நான் உந்தன் தேவன்
திக்கற்றோனாய் ஒருபோதும் கைவிடேன்
நீதியின் வலக்கரத்தாலே உன்னை
நித்தமும் தாங்கிடுவேன் என்றனரே – வானம்

என் பிதாவின் நித்திய வீட்டினிலே
ஏராளம் வாசஸ்தலம் அங்குண்டே
எனக்கோர் ஸ்தலத்தை ஆயத்தமாக்கியே
என்னை சீயோனில் சேர்க்க வந்திடுவார் – வானம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS