Mannorai Meetkavantha | மண்ணோரை மீட்கவந்த

Loading

மண்ணோரை மீட்கவந்த ராஜாவே
விண்ணின்று மீண்டும் வாருமே
மன்னோராம் எம்மை
விண்ணோடு சேர்க்க
விண் தூதரோடு வாருமே

பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்
பேரின்பத்தோடு வாழ்வதற்கு
வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி
சென்ற எம்தேவா வாருமே

அறியாத நேரம் வருவேனென்றீரே
அடியார்கள் நெஞ்சில் ஊக்கத்தோடு
விசுவாசம் அன்பு நம்பிக்கையோடு
விழித்திருக்க அன்பால் அருள் தாருமே

நித்திரை செய்யும் தேவதாசரும்
இத்தரை மீது வாழ்வதற்கு
கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல
கெம்பிரமாக வாருமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS