Mannorai Meetkavantha | மண்ணோரை மீட்கவந்த

மண்ணோரை மீட்கவந்த ராஜாவே
விண்ணின்று மீண்டும் வாருமே
மன்னோராம் எம்மை
விண்ணோடு சேர்க்க
விண் தூதரோடு வாருமே

பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்
பேரின்பத்தோடு வாழ்வதற்கு
வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி
சென்ற எம்தேவா வாருமே

அறியாத நேரம் வருவேனென்றீரே
அடியார்கள் நெஞ்சில் ஊக்கத்தோடு
விசுவாசம் அன்பு நம்பிக்கையோடு
விழித்திருக்க அன்பால் அருள் தாருமே

நித்திரை செய்யும் தேவதாசரும்
இத்தரை மீது வாழ்வதற்கு
கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல
கெம்பிரமாக வாருமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS