To Advertise Contact - christmusicindia@gmail.com

Motchayaaththirai Selgirom | மோட்சயாத்திரை செல்கிறோம்

Loading

மோட்சயாத்திரை செல்கிறோம் மேலோகவாசிகள் – இம்
மாயலோகத் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்ஜியம் கண்டடைவோம்

பல்லவி
ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதிமூற் பிதாகளோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

சத்திய சுவிசேஷம் எடுத்துரைப்போமே தம்
நித்திய ராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் ஏசு வாக்குரைகள் நம்பியே

அள்ளி தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் ஏசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்தெம்மை தேற்றுவார்

மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே – நல்
ஏகமாய் வனாந்தர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்

கர்த்தர் எம் அடைக்கலம் கவலையில்லையே – இக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்

ஆரவாரத் தோடெம்மை அழைத்துச் சென்றிட – தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர் எக்
காள தொனியுடன் வருகிறார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS