To Advertise Contact - christmusicindia@gmail.com

Naan Paavithaan | நான் பாவிதான்

Loading

நான் பாவிதான் – ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
‘வா’ என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறைபிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன்

நான் பாவிதான் – மாபயத்தால்
திகைத்து பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன்

நான் பாவிதான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன்

நான் பாவிதான் – இரங்குவீர்
அணைத்து காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன்

நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்
உமக்கு சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS