Naan Unakku | நான் உனக்கு

Loading

நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை
நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே
(காத்திரு மகனே)
உன் மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு

ஈசாக்கு விதை விதைத்து
நூறு மடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அது போல

ஏசேக்கு சித்னா
,இன்றோடு முடிந்தது மகனே ( மகளே)
ரெகோபோத்  தொடங்கி விட்டது – உனக்கு

தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இது முதல்

கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள் – இது முதல்
அறிக்கை செய்வார்கள்

கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவாய் – தேசத்தில்

உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதனம் செய்வார்கள் – உன்னோடு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS