To Advertise Contact - christmusicindia@gmail.com

Nandriyaal Paadiduvom | நன்றியால் பாடிடுவோம்

Loading

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய் – நன்றியால்

உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க – நன்றியால்

ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் – நன்றியால்

மித்ருக்கலான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் – நன்றியால்

அழைக்கப் பட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் – நன்றியால்

சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே – நன்றியால்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS