வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன்
பாத புரியாம பயந்து நின்னேன் – 2
நூறு பேர தேடி நீங்க போகல
தொலைந்து போன என்ன தேடிவந்திங்க – 2
நீர் என்ன மறக்கல
என்ன விட்டு விலகல
ஏக்கமுள்ள கண்ணால
ஏங்கித்தான் நின்னீங்க
நீர் என்ன வெறுக்கள
தள்ளி தூரம் போகல
கால்கடக்க எனக்காக
கடல் தாண்டி வந்திங்க – 2
1. சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க
தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன் – 2
என்ன தேடுவத நீங்க நிறுத்தல
உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல – 2
புதியதுவக்கம் எனக்கு தந்திங்க
உங்க தோளின் மீது சுமந்து வந்திங்க
2. கல்லெறியும் கூட்டத்தின் முன்னே
என் ஆதரவாய் நின்றவர் நீரே – 2
என் கரம்பிடித்து தூக்கினீர்
என் கறைகளெல்லாம் நீக்கினீர் – 2
உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே
என்னை தள்ளாத தகப்பன் நீரே
இயேசு என்ன மறக்கல
என்ன விட்டு விலகல
ஏக்கமுள்ள கண்ணால
ஏங்கித்தான் நின்னீங்க
நீர் என்ன வெறுக்கள
தள்ளி தூரம் போகல
கால்கடக்க எனக்காக
கடல் தாண்டி வந்திங்க -2
ஒ….. கடல் தாண்டி………. எனக்காக வந்திங்க…….

