To Advertise Contact - christmusicindia@gmail.com

Neerindri Vaazhvethu Iraivaa | நீரின்றி வாழ்வேது இறைவா

Loading

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நீரின்றி

பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தைபோதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
வார்த்தையில் உம் வார்த்தையில் உண்டு அற்புதமே – நீரின்றி

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேனும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா – நீரின்றி

எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
அதில் எதற்கென்று நன்றி சொல்லித் துத்டிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா – நீரின்றி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS