Nichchayamaagavae | நிச்சயமாகவே

நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது

கர்த்தரையே பற்றிக்கொள்
திருவசனம் கற்றுக்கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு

சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு

எரிச்சலை விட்டுவிடு
பொறாமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
வம்புகள் மறைந்து போகணும்

நாவு நல்லதையே
நாள்தோறும் பேசினால்
கர்த்தரின் திரு இருதயம்
களிகூறுமே உன்னாலே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS