To Advertise Contact - christmusicindia@gmail.com

Nilaiyillaa Ulagaththil | நிலையில்லா உலகத்தில்

Loading

நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா
நினைத்தென்னை அழைத்தீரே எனதேசையா

மறந்தும்மை மறுதலித் தடங்காமலே
மனம் போன வழிகளில் நடந்தேனையா
மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து
மனதுருகினீரே ஐயா – என் மேல் – நிலையில்லா

சிறந்த உம்முகம் காண விரைந்தாசித்தேன்
சிலுவையின் தரிசனம் அளித்தீரையா
இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன்
இனிமேல் என் துணை நீரையா – பூவில் – நிலையில்லா

உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர்
உமதாவி என்னிலீந்து பெலனளித்தீர்
உமையன்றி பூவில் வேறு அடைக்கலம் எமக்கில்லை
உம்மை நம்பி ஜீவிப்பேனையா – இனி – நிலையில்லா

அதிசீக்கிரமாய் நீங்கும் உபத்திரவம்
அதிக நித்திய கன மகிமை தரும்
பலவித இன்னல் கண்டும் சிலவேளை சிட்சை வந்தும்
பதறாமல் பொறுப்பேனையா – இன்னும் – நிலையில்லா

உடுக்க உடையும் உண்ண உணவும் தந்தீர்
இடுக்கமான உம் பாதை எமக்களித்தீர்
விசுவாசப் பிரயாணத்தை தொடங்கின தின முதல் நிலை
விசுவாசம் பெருகுதையா – என்னில் – நிலையில்லா

இருண்ட கெத்சமனேயில் ஒளி தோன்றுதே
இனிய இயேசையா உந்தன் திருமுகமோ
எனக்குந்தன் அனுபவம் அளித்திட திரும்பவும்
தினம் ஜெபம் செய்கின்றேனையா – தேவா – நிலையில்லா

எனது மரணமோ உம் வருகை நாளோ
எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ
கடைசி முடிவு நாளில் மறவாதீர் என்னை நாதா
கனிவாய் வேண்டுகின்றேனையா – இப்போ – நிலையில்லா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS