தள்ளுண்ட நேரங்களில்
தனிமையின் பாதைகளில்
தயவை என்னை தேடி வந்தீர்
துன்மார்க்கர் மத்தியினில்
தயவற்று நிற்கயினில்
துணையாய் உறவாக வந்தீர்
தகுதியே இல்லா எனக்கு
தகப்பனாய் மாறினீர்
முன்னுரிமை எனக்கு தந்து
பிள்ளையாய் மாற்றினீர் -2
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
நீர் கைவிடாதிருப்பீர்
இம்மட்டும் வந்த நல்ல எபனேசர்
நீர் இனியும் உதவிடுவீர்
ஒவ்வொரு நாளும் உம் கிருபையே
என் ஜீவனை காத்திடுதே
ஒவ்வொரு நாலும் உம் மறைவிலே
நான் மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்
ஆபத்து நேரத்திலே
அழுகுரல் கேட்டவரே
அரணாய் அருகினில் வந்தீர்
ஆழியின் ஆழத்திலே
அலங்கோலம் கண்டவரே
அழகாய் என்னை மீட்க வந்தீர்
ஒன்றுமே இல்லா என்னை
அலங்கமாய் மாற்றினீர்
அன்போடு அழைத்து என்னை
ஆளுகை செய்குறீர்-2
என் இழப்புகள் மத்தியில்
என் தனிமையின் பாதையில்
என் ஆத்துமா உம்மை நோக்கி படுமே
இனி வாழ்வது நான் அல்ல
என்னில் இயேசுவே வாழ்கிறீர்
உம் பெலத்தினால்
யாவையும் மேற்கோளுவேன்
இனி துதியினால் எழும்புவேன்
என் தடைகளை தாண்டுவேன்
உம் பெலத்தினால்
யாவையும் மேற்கோளுவேன்

