Paava Sanjalaththai Neekka | பாவ சஞ்சலத்தை நீக்க

Loading

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சாவுதுக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும், ஊக்கமான ஜெபத்தால்

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்வை, தீய குணம் மாற்றுவார்

பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும்போதும் புகலிடம் இதிவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கி கெஞ்சுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS