Palamaliththemmaip Puthu | பலமளித்தெம்மைப் புது

Loading

பலமளித்தெம்மைப் புது வழிகளில் நடத்திட
தாரகம் நீரல்லவோ

அனுபல்லவி
தாரணியிலெமக்குத் தயைபுரிந்திடும் இயேசு
நாயகன் நீரல்லவோ

சரணங்கள்
இருவரொருமித்து என் நாமத்த்திலே கூடும் வேளை
சமூக மளிப்பேனென்றீரே
உம் அருள் வாக்குபோல அளித்தீரே உம் சமூகம்
உம்மை துதித்து மகிழ்வேன்

அதிசயமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே
இதுசயமுமது இதயம் விரும்புவதை
இறையே விளங்கச் செய்வீரே

பாவிக ளும்மண்டை பாவ உணர்வடைந்து
தாகமுடனடைந்திட
நாவினறிக்கையினால் நவீன இதயம் பெற்று
நசரேயனைப் பின் சென்றிட

கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமதுமத்தியில் செய்து
அலகை அடைக்க வேணுமே

வழி நடத்திட எம்மை வல்லமை யுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மை காருமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS