Parisuththar Koottam Naduvil | பரிசுத்தர் கூட்டம் நடுவில்

Loading

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
பாவி நீச பாவி நான் ஐயா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ – பரிசுத்தர்

மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார் – பரிசுத்தர்

பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உல் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகிறேன்
பரிசுத்தம் கெஞ்சுகிறேன் – பரிசுத்தர்

துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும் – பரிசுத்தர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS