பிரதான தூதன் எக்காளம் முழங்கும்
பரமன் இயேசு வருவார் – (2)
அனுபல்லவி
சாயங்காலத்திலோ நடுராவினிலோ
சேவில் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயேசு வருவார்
இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரிகள் ஏந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக் கொள்ளப்படுவார் ஒருவர் – சாயங்காலத்திலோ
நோவா காலத்தின் சம்பவம் போல்
நடந்திடும் அந்த நாட்களிலே
புசித்தும் குடித்தும் பெண்கொண்டும்
பலர் அசந்து வெறித்திருப்பார் – சாயங்காலத்திலோ
லவுகீகக் கவலைகளினாலும்
இளசை மிகுந்த வெறியினாலும்
எம் இதயம் பாரம் அடையாமல்
எச்சரிக்கையுடன் காத்திருப்போம் – சாயங்காலத்திலோ
இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொறுங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் – சாயங்காலத்திலோ
தவிக்கும் உலகம் அந்த நாளில்
தலைகள் உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார் – சாயங்காலத்திலோ