To Advertise Contact - christmusicindia@gmail.com

Siluvai Meethe | சிலுவை மீதே

Loading

பல்லவி
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
நெருக்கி எவிடுதே

சரணங்கள்
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார்
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணிக்கிறேன் – சிலுவை

கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும்
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் – சிலுவை

எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார்
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கிறார் – சிலுவை

அறிவுக் கெட்டாநேசர் அன்பில்
அகலம் ஆழமுண்டோ
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செலுத்திடுவோம் – சிலுவை

முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன் – சிலுவை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS