Thanthaanaith Thuthippome | தந்தானைத் துதிப்போமே

Loading

பல்லவி
தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையோரே கவி – பாடிப்பாடி

அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளர்கரியதோர் நன்மை மிக மிகத் – தந்தானை

சரணங்கள்
ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்

கண்ணாரக் களித்தாயே – நம்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாறிபோற் பெய்துமே

சுத்தாங்கத்து நர்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்

தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்தக் கரத்திலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அந்தந மணவாட்டி யாக்கினது என்னை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS