To Advertise Contact - christmusicindia@gmail.com

Then Inimaiyilum | தேன் இனிமையிலும்

Loading

பல்லவி
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவீர் திருச்சபையானோரே

காசிநிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே – தேன்

பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் பின்னும்
நேமியம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே – தேன்

காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கி விடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே – தேன்

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் – நீ
அன்பதாய்ச் சேர்ந்தால் அனைத்துனைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே – தேன்

பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பிடித்துக் கொண்டால்தான் பேரின்ப வாழ்வைப் பெறுவாய் நீ மனமே – தேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS