To Advertise Contact - christmusicindia@gmail.com

Thirukkaraththaal Thaangi | திருக்கரத்தால் தாங்கி

Loading

திருக்கரத்தால் தாங்கியென்னை
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS