Thivviya Anbin | திவ்விய அன்பின்

திவ்விய அன்பின் சத்தத்தை ரட்சகா!
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிசேர என் ஆண்டவா!
ஆவல் கொண்டிதோ வந்தேன்

பல்லவி
இன்னும் கிட்டக் கிட்டச் சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்டக் கிட்டச் சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த ரட்சகா

என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடென்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும்

திருப்பாதத்தில் தாங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய்ச் சந்தோஷ மாகிறேன் – இன்னும்

இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்விய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் – இன்னும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS