Thoththiram Seyvene | தோத்திரம் செய்வேனே

Loading

பல்லவி
தோத்திரம் செய்வேனே இரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்

அன்னை மேரி சுதனை – புல் மீது
அமிழ்ந்து கழுதவனை
முன்னனை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம்

செம்பொன்னுருவானை – தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன்மலர் தூவி – தோத்திரம்

கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க்கானந்த மாட்சியளித்தோனை
வானபரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS