Thudhigal Oyaadhu | John Jebaraj – Lyrics

Thuthigal oyathu song lyrics

மீன்களை பிடித்தவன்
மனுஷனைப் பிடிக்கவே மாற்றின இயேசு
என் படகில் உண்டு
நிச்சயம் ஒருநாள் மறுதலிப்பேன் என்று அறிந்தும்
அழைத்தவர் அருகில் உண்டு

நான் வீசும் வலைகள் எல்லாம்
வெறுமையாய் வந்தாலும்
என்னோடு அவர் இருக்க குறையேது

புயல் அடித்தாலும் அலையடித்தாலும்
என் துதிகள் ஓயாது
கரை தெரியாமல் கண்ணலைந்தாலும்
என் துதிகள் ஓயாது
என் நம்பிக்கை அவமானாலும்
என் துதிகள் ஓயாது

கை விட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
வேற (எனக்கு) யாரும் கிடையாது – 2

கடலிலே மிதந்திடும் படகை நான் நம்பல
கடல் மீது நடப்பவரை நம்பி வந்தேன்
நீந்திட தெரிந்த மீனவனாய் இருந்தும்
நீர் வந்து கைதூக்க காத்திருந்தேன்

நான் மூழ்கும் செய்திய
ஊர் பேச விடமாட்டிர்
அழைத்தவர் கைவிடலென்னு பேச வைத்தீர்.

error: Content is protected !!
ADS
ADS
ADS