Unnathamaanavarin Uyar | உன்னதமானவரின் உயர்

Loading

உன்னத மானவரின் – உயர்மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

பல்லவி

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம்
சிறகுகளால் மூடுவார்

தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே – அவர்

இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் – அவர்

ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே – அவர்

தேவன் உன் அடைக்கலமே – ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதியும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் – அவர்

உன் வழிகளிலெல்லாம் – உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் – அவர்

சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் – அவர்

ஆபத்திலும் அவரை நான் – நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் ரட்சிப்பாரே
என் ஆத்துமா நேசரவர் – அவர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS