To Advertise Contact - christmusicindia@gmail.com

Vaarum Aiyaa Pothagare | வாரும் ஐயா போதகரே

Loading

வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே
உத்தமனே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
காவலனே கருணை செய்வாய்

நான் இருப்பேன் நடுவில் என்றார்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்

உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமரப் பரிகரித்தே
பாக்கியம் அளித்தாண்டருள்வாய்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS