Vaathai Unthan Koodaaraththai | வாதை உந்தன் கூடாரத்தை

Loading

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்

ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு

கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்

அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்

நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

அற்பமான ஆரம்பத்தை
அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்

ஆற்றல் அல்ல சக்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS