Visuvaasaththaale Naamum | விசுவாசத்தாலே நாமும்

விசுவாசத்தாலே நாமும் பிழைப்போம்
பசுமை செழிப்புடன் வாழ்வோம்
இயேசு தேவனை நம்பினோரே

அனுபல்லவி
விஸ்வாசம் எம்மில் கடுகளவிருந்தால்
வீழ்த்திடுவோம் மலையைக் கடலிலே
உலகை ஜெயித்திடுமே விஸ்வாசம்
உத்தம இருதயத்தில் தாங்கும் விசுவாசத்தாலே

கர்த்தரைக் கண்டு விசுவாசிப்பதிலும்
காணாமல் நம்பினால் பாக்கியமே
தரிசித்தல்ல விசுவாசத்தாலே
தங்கி நம்மில் வசிக்கும் கர்த்தருக்குள்
பரிசுத் தாவியினாலே மகிழ்ந்து நாம்
பூரண மகிமை அடைவோம் – விசுவாசத்தாலே

வீரர்களாக நின்றிடுவோமே
விசுவாச சோதனை நேர்ந்திடினும்
பொன்னைப் போல நெருப்பில் புடமிட்டபோதும்
பொன்னாக நம் விசுவாசம் விளங்க
புகழ்ச்சி கணம் மகிமை கிடைக்குமே
பரமன் வெளிப்படும் நாளில் – விசுவாசத்தாலே

ஆபிரகாமின் விசுவாச மார்க்கம்
அந்த அடிச்சுவட்டில் நடப்போர்
வாழ்வினில் நீதி கிறிஸ்துவின் மூலம்
வாக்குத்தத்த ஆசீர்வாத நன்மைகள்
ஜெயத்தின் மேல் ஜெயங் கொண்டு பக்தர்கள்
சந்ததம் சுதந்தரிப்போம் – விசுவாசத்தாலே

தேவ குமாரன் வந்திடும் நாளில்
தூய விசுவாசத்தோடு பறப்போம்
மூலைக்கல் இயேசு திட அஸ்திபாரம்
மாளிகையாய் அவர் மேல் இணைந்து நாம்
பரம அழைப்புடன் சேர்ந்து சீயோனில்
பிதாவின் முகம் கண்டு வாழ்வோம் – விசுவாசத்தாலே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS