Yaar Ennaik Kaivittaalum | யார் என்னைக் கைவிட்டாலும்

Loading

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

இரத்ததாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS