To Advertise Contact - christmusicindia@gmail.com

Kalvaari Kurusandai | கல்வாரி குருசண்டை

Loading

கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்
திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய்
என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன்
என் பாவம் நீங்கினதே

சரணங்கள்
மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே
வீண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட
உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால்
உம்மை என்றும் துதிப்பேன்
என்றும் உம்மை துதிப்பேன்

உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட
உம் பெலனாம் என்னை தேற்றிடுமே
ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய்
ஊழியம் செய்திடவே
தேவா அருள் செய்குவீர்

உன்னத ஆவியை என்னில் ஊற்றும்
இன்னிலம் தன்னில் நான் பிராகசிக்க
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
உம் கரம் பற்றிடுவேன்
உம் வழி நான் நடப்பேன்

சிலுவைக் காட்சியைக் கண்டிடுவேன்
அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன்
சாந்த சொரூபியாம் ஏசுவின் சிலுவையில்
சாய்ந்திடுவேன் நானும்
ஏசுவை என்றும் விடேன்

என்னையே முற்றிலும் உம் கரத்தில்
ஜீவ பலியாக படைக்கிறேன்
மன்னவா விண்மீது நீர் வரும் வேளையில்
ஏழையான் காணப்பட
நீர் என்னைக் காத்துக் கொள்வீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS