To Advertise Contact - christmusicindia@gmail.com

Enthan Iyaesuvin Anbathaiyae | எந்தன் இயேசுவின் அன்பதையே

Loading

பல்லவி
எந்தன் இயேசுவின் அன்பதையே
எண்ணும் வேளையில் ஆனந்தமே

கடந்த நாட்களில் கைவிடாமலே
கண்ணின் மணிபோல் காத்ததினால்
மனப்பூர்வமாய்த் துதிப்பேன் மகிழ்வுடனே
மன்னன் கிறிஸ்தேசுவையே – எந்தன்

அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்
அன்பின் மொழியால் பேசினாரே
புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினால்
]புன்னியரைப் போற்றிடுவேன் -எந்தன்

வறுமை, வியாதியின் வலிய தோல்வியும்
வந்த வேளையில் தாங்கினாரே
ஜெய கீதம் தினமும் எவ்வேளையிலும்
ஜெயத்துடன் பாடிடுவேன் – எந்தன்

நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை
இழந்த வரங்களும் ஈந்ததினால்
அவர் சேவையை புரிந்து கனம், மகிமை
அவருக்கே செலுத்திடுவேன் – எந்தன்

நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே
நீதி சூரியன் தோன்றிடுவார்
மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்
மட்டற்ற பேரின்பமுடன் – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS