To Advertise Contact - christmusicindia@gmail.com

Kalvaariyil Thongukindraar | கல்வாரியில் தொங்குகின்றார்

Loading

கல்வாரியில் தொங்குகின்றார்
என் பாவம் நீங்க தம்மை தந்தார்
எந்தன் சிலுவை எற்றனரே

சரணங்கள்
வேர்வையும் இரத்தமுமாக ஆத்துமா வியாகுலம்
அடைந்தாரே இயேசு உனக்காக
தந்தையே உம் சித்தம் என்று இயேசு கதறினாரே – கல்வாரியில்

சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தொராய்
நிந்தை யாவும் உனக்காய் எற்றாரே
வாரினால் அடித்தார் கோரமான காட்சியாகும் – கல்வாரியில்

மாசற்ற தேவனே மகிமை யாவும் துறந்தோராய்
நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தைப் போக்கியே நீதிக்கு பிழைக்கச் செய்தார் – கல்வாரியில்

கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் எற்றாரே
சுகமே அடைவாய் தழும்பாலே குணமடைவாய் – கல்வாரியில்

எத்தனை துன்பங்கள் என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே சென்று வாழ்ந்திடுவாய் – கல்வாரியில்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS