To Advertise Contact - christmusicindia@gmail.com

Meippanin Kural | மேய்ப்பனின் குரல்

Loading

மேய்ப்பனின் குரல் கேட்கும்
சின்ன ஆட்டுக்குட்டியாம் நானே
அழுகையின் குரல் கேட்டு
என்னைத் தேடிவந்தார் இயேசுராஜன்

புதரிலே சிக்குண்டேனே
பயந்து நான் நடுங்கினேனே
அழைத்தார் என்னை அன்றே
அன்பரின் குரல் கேட்டேன் – மேய்ப்பனின்

கீழ்படியாமல் ஓர் நாள்
ஓடி ஓடி ஒழிந்தேனே
தேடி வந்து என்னைப் பிடித்தார்
தற்பரன் இயேசு ராஜன் – மேய்ப்பனின்

ஓநாய் ஓர் நாள் என்னை
பின் தொடர்ந்து முன் வந்ததே
விலக்க என் கோலுமானார் – என்னை
விடுவிக்கும் தடியுமானார் – மேய்ப்பனின்

அன்பரின் குரல் கேட்ட
நல்ல ஆட்டுக்குட்டியாம் நானே
அடங்கி நடப்பேனே
அவர் தொழில் இருப்பேனே, இயேசு தோளில் இருப்பேனே – மேய்ப்பனின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS