பாரக் குருசில் பரலோக ராஜன்
பாதகனைப்போல் தொங்குகிறாரே
பார்! அவரின் திரு இரத்தம் உன்
பாவங்கள் போக்கிட பாய்ந்திடுதே
வந்திடுவாய் இயேசுவண்டை
வருந்தியே அழைக்கிறாரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே
வாதைகள் நீககுவாரே
இதயத்தின் பாரம் அறிந்து மெய்யான
இளைப்பாறுதலை அளித்திடுவாரே
இன்னுமென்ன தாமதமோ
இன்றே இரட்சிப்படைய வருவாய் – வந்திடுவாய்
சிலுவையின் மீதில் சுமந்தனரே உன்
சாப ரோகங்கள் தம் சரீரத்தில்
சர்வ வல்ல வாக்கை நம்பி
சார்ந்த சுகம் பெறவே வருவாய் – வந்திடுவாய்
நித்திய வாழ்வு பெற்றிட நீயும்
நித்திய ஜீவ ஊற்றண்டைவராய்
நீசனென்று தள்ளாதுன்னை
நீதியின் பாதையில், சேர்த்திடுவார் – வந்திடுவாய்
இயேசுவின் நாமம் ஊற்றுண்டதைலம்
இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள்
இல்லையே இந்நேசரைப் போல்
இகமதில் வேறோர் அன்பருனக்கே – வந்திடுவாய்