To Advertise Contact - christmusicindia@gmail.com

Paareer Gethsamane Poongaavil | பாரீர் கெத்சமனே பூங்காவில்

Loading

பாரீர் கெத்சமனே பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய்வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

தேக மெல்லாம் வருந்தி சொகமடைந்தவராய்
தேவாதி தேவன்யேக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்

அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்
செய்தேன் என்றாரே – பாரீர்

இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேல் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே – பாரீர்

மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர்
மீட்புறவே – பாரீர்

அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பார்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து
அலறுகின்றார் – பாரீர்

என்னையும் தம்மைப்போல மாற்றும் இம்மாநேசத்தை
என்னிஎன்னியே உள்ளங் கனிந்து நான் என்றும்
புகழ்ந்திடுவேன் – பாரீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS